“தனியார்மயமானால் மின் கட்டணம் குறையும்!” – புதுச்சேரி மின்துறை குறித்து தமிழிசை விளக்கம்
சென்னையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற, சிறந்த கராத்தே வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “மக்களுக்கு பயனில்லாத எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்காது. மின்துறை தனியார்மயமாவதன் மூலம் மக்களுக்கு முதலில் மின் கட்டணம் குறையும். மின்சார இழப்பும், மின் திருட்டும் நடப்பது தடுக்கப்படும்….