“தினமும் பூஜை, பிடித்த உணவு… அவனைத் தெய்வமாக வணங்குகிறோம்!”- வளர்ப்பு நாய்க்காக உருகும் குடும்பம்
வீட்டில் உள்ளவர்கள் மறைந்துவிட்டால் அவர்களது போட்டோவை வைத்து வணங்குவது அனைவரது வழக்கம். கும்பகோணத்தில் ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக அவர்கள் வளர்த்த நாய் திடீரென இறந்துவிட அதன் போட்டோவை வைத்து தினமும் மாலை அணிவித்து அதற்குப் பிடித்த உணவு ஒன்றைப் படைத்து வணங்கி வருவது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வளர்ப்பு நாய் உடன் பன்னீர்செல்வம் கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ஓவியக்கலைஞரான இவர், அழிந்து வரக்கூடிய கலையான தஞ்சாவூர் ஓவியம் வரைவதுடன் அதனைப் பலருக்கு கற்றுக் கொடுத்தும்…