Rebel Review: கேரளாவில் படிக்கும் தமிழ் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்; படமாகச் சரியான பார்வைதானா?
மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மகன்களான கதிர் (ஜி.வி.பிரகாஷ் குமார்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்ட பலருக்குப் பாலக்காட்டிலுள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. அங்கே செல்லும் தமிழ் மாணவர்களான இவர்களுக்கு எஸ்.எப்.ஒய் (S.F.Y) மற்றும் கே.எஸ்.கியூ (K.S.Q) என்ற கேரளக் கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களால் ரேகிங், சாதிய, இனக் கொடுமைகள் நடக்கின்றன. இதனைச் சமாளிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே `ரெபல்’ படத்தின் கதை. படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜி.வி.பிரகாஷின் அம்மா கதாபாத்திரம்…