17 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய சம வயது சிறுவன்; நீதிமன்றம் அளித்த நூதன தண்டனை சரியா?
நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும். அப்படி சில தினங்களுக்கு முன்னால் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனையைப்பற்றி பலரும் பேசியிருந்தார்கள். அதாவது, 17 வயதான அந்தச் சிறுவன் சம வயதுகொண்ட சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டார் என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம். சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அச்சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். போக்சோ பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கச் சென்ற…