இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா… கம்பி வைத்துப் பிடிக்கப்பட்ட 22 தெரு நாய்களின் கதி?
தனியார் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த 22 நாய்களை பிடித்து சென்றவர்கள் மீது மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இன்னும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று விலங்கின பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். தெரு நாய்கள் தெரு நாய்கள் ‘திடீர்’ பிடிப்பு! நாய் பாதுகாப்பாளர்கள் எதிர்ப்பு.! மதுரையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் சித்திரவதை செய்து பிடிப்பதாக புறக்கணிக்கப்படும் நாட்டு, சமூக நாய்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள்…