“சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை..!” – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை சொல்வதென்ன?!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை `சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அளவு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியதும் மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்பட பல காவல் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு….