தீபாவளி எண்ணெய்க் குளியல், கேதார கௌரி விரதம், லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?
ஐப்பசி மாதம் தொடங்கியதுமே தீபாவளி குறித்த எதிர்பார்ப்பும் திட்டமிடலும் தொடக்கிவிடும். காரணம் தீபாவளி நம் மரபில் மிகவும் முக்கியமான பண்டிகை. அதை நினைத்ததுமே மனதில் ஒரு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தோன்றிவிடும். வழக்கத்தைவிட சீக்கிரம் எழுந்து பொழுது புலர்வதற்குள்ளாக நீராடி வழிபாடுகள் செய்வது தீபாவளியின் சிறப்பு. இருள் சூழ்ந்த வேளையில் பொழுது புலர்வதற்கு முன்பாகவே குளிர் காற்றும் சில வேளைகளில் லேசான தூறலும் இருக்கும்போதே எண்ணெயைத் தேய்த்துக் குளித்து மிதமான வெந்நீரில் நீராடும் சுகமே அலாதியானது. அதன்பின் புத்தாடைகள்,…