அறநிலையத்துறை ஏற்பாடு செய்த அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் – பழநியிலிருந்து புறப்பட்ட முதியவர்கள்!
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களுக்கு வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்துச் செல்லும் திட்டம் சமீபத்தில் இந்துசமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்டது. பழநி முருகன் கோயில் இதில் முதியவர்கள் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லப் போக்குவரத்துச் செலவு, தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் அவர்களுக்குத் தேவையான போர்வை, குளியல் சோப், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியைச்…