மதுரை: 500 ஆண்டுகள் பழைமையான வளரி வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு!
போரில் வீரமரணமடையும் வீரர்களைப் போற்றும் வகையில் நடுகல் அமைப்பது மன்னராட்சி காலத்தில் தமிழகத்தில் வழக்கமாக இருந்துள்ள நிலையில், அவை தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் மதுரை மாவட்டம் தி.குண்ணத்தூர் அருகே கி.பி 16 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளரி வீரன் நடுகல் பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் தலைமையில் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் தி.குண்ணத்தூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு…