TN Rains: `3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!’ – வானிலை ஆய்வு மையம் தகவல் | முழு விவரம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய நாளைப் பொறுத்தவரையில், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட…