சொத்துக்காக துன்புறுத்திய பிள்ளைகள்… சிதிலமடைந்த வீட்டில் எறும்பு மொய்க்கக் கிடந்த மூதாட்டி!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பந்தல்விளை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி எமிலி. 85 வயதான எமிலியின் கணவர் பொன்மணி இறந்துவிட்டார். எமிலிக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என ஆறு பிள்ளைகள் இருந்தனர். அதில் ஒரு மகன் இளமையில் விபத்தில் இறந்துவிட்டார். ஒரு மகன் தேன் வியாபாரியாகவும், ஒரு மகன் ஓய்வு பெற்ற ராணுவ வீரராகவும், மற்றொருவர் வெளிநாட்டிலும் வேலை செய்துவருகின்றனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கணவர் இறந்த பிறகு எமிலி மூன்று மகன்கள்…