கேரள லெஸ்பியன் வழக்கு: இளம் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கேரள மாநிலம், மலப்புறத்தைச் சேர்ந்த சுமையா ஷெரின் என்ற இளம் பெண்ணும், ஹபீஃபா என்ற இளம் பெண்ணும் 12-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தபோது நெருங்கிய தோழிகள். பின்னர் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். இரண்டு வருடங்களாக காதலித்தவர்கள் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி தம்பதியாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதற்கிடையே மகள் ஹபீஃபாவை காணவில்லை என கொண்டோட்டி காவல் நிலையத்தில் அவரின் தந்தை புகார் அளித்தார். பின்னர் சுமையா ஷெரினும், ஹபீஃபாவும் மலப்புறம் மாஜிஸ்திரேட்…