Vairamuthu: மலேசியாவில் `பெருந்தமிழ் விருது’ பெற்ற கவிஞர் வைரமுத்து – குவியும் வாழ்த்துக்கள்!
மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு `பெருந்தமிழ் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகா கவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதைத் தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை கௌரவிக்கும் வகையில், மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருதை’ வழங்கியிருக்கின்றன. மகா கவிதை தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன்…