ஊட்டி: தடை செய்யப்பட்ட மலை உச்சி பகுதி; விரட்டிய தேனீக்கள் – 300 அடி பள்ளத்தில் கிடந்த சடலம்
நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதியான செங்குட்டுராயன் மலைப் பகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த நண்பர் உதவியுடன் சென்னை மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறி நேற்று நுழைந்துள்ளனர். ஆபத்தை உணராமல் மலை உச்சியில் உலவிக் கொண்டந்தவர்களை தேனீக்கள் திடீரென விரட்டியுள்ளன. தேனீக்களைக் கண்டுப் பதறிய இளைஞர்கள், ஆளுக்கு ஒரு திசையில் தப்பித்து ஓடியுள்ளனர். செங்குட்டுராயன் மலை நிலைமை சீரானதும் அனைவரும் ஒன்றுகூடிய நிலையில், ஒருவர் மட்டும் மாயமாகியுள்ளார்….