சாவிலும் பார்க்கப்படும் சாதி… `பொய்’யாகிப் போன `பொது’ மயானம்! – ஸ்ரீவில்லிபுத்தூர் அவலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் ஏ.இராமலிங்கபுரம். இந்த கிராமத்தில் வசித்து வந்த மாரிச்சாமி என்பவர் திடீரென மாரடைப்பால் இறந்துபோனார். இந்நிலையில், அவரின் இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கு பொது மயான எரியூட்டு மேடையை பயன்படுத்த குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதிக்கவில்லை என்ற பரபரப்பு புகார் நமக்கு கிடைத்தது. இது குறித்து கள விசாரணை நடத்தினோம். பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் மாரிச்சாமியின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் பேசினார். அப்போது அவர், “எனது உடன்பிறந்த மூத்த சகோதரர் மாரிச்சாமி. கூலி வேலை செய்து…