“கருணாநிதி கலைஞரானதற்கும் கோவைக்கும் சம்பந்தம் உண்டு”- புலவர் செந்தலை கவுதமன் பகிர்ந்த தகவல்கள்
கோவை ‘பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி’யில் நடைபெற்ற சிறுவாணி இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டு, புலவர் செந்தலை கவுதமன் சிறப்புரையாற்றினார். பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் பெயர் காரணத்தில் தொடங்கியவர் அடுத்தடுத்து கோவையின் இலக்கிய வரலாறுகளை அடுக்க ஆரம்பித்தார். அவரின் உரையில் “ஆங்கிலேயர்கள், ‘இந்த கோவை மாநகரில், மக்கள் வாழ்வதற்கான தகுதிகள் இல்லை’ என்றார்கள். ‘இங்கு இருக்கின்ற நீர், நோயை உண்டாக்கும்’ என்றார்கள். ‘மக்களே, போய் விடாதீர்கள் கோவைக்கு’ என்று ஆங்கிலேயர்கள் அறிவுறுத்தினார்கள். ஆங்கிலேயர்…