`மீண்டும் மீண்டுமா?’ – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் – தீர்ப்பை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!
அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தடை விதிக்கக் கோரி, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஓ.பி.எஸ் தாமதப்படுத்துவதைச் சுட்டிக்காட்டி, அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து, உத்தரவிட்டிருந்தார். இடைக்கால தடைக்காலம் முடிந்த…