விவாகரத்து வழக்கு: பெண்கள் தங்கள் கணவரின் குடும்பப் பெயரை நீக்க கூடாதா? – அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், தனது விவாகரத்து வழக்கை எதிர்கொண்டுள்ளார். அவர், திருமணத்திற்குப் பிறகு தனது பெயருடன் தன் கணவரின் குடும்பப் பெயரை சேர்த்திருந்தார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் விவாகரத்து வழக்கு விசாரணையில் இருக்கும்போது, திருமணத்திற்கு முன்பு இருந்த தனது குடும்பப் பெயரை பயன்படுத்த விரும்பினார். ஆனால், அதற்குக் கணவரின் ஒப்புதல் தேவை என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்குப் பிறகு…