மதுரை: 3-வது நாளாக தொடரும் ரெய்டு; கோடிக்கணக்கில் ரொக்கம்… கிலோ கணக்கில் தங்கம்!
மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கமும், 5 கோடி மதிப்பில் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருமான வரித்துறை முருகன், ஜெயக்குமார், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து, மதுரையில் நடத்தி வரும் கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்தும், பல கோடி ரூபாய்க்கு வரி…