மாட்டுப் பொங்கலுக்கு தயாரான நெட்டி மாலை… இதில் என்ன சிறப்பு?
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கால்நடைகளைப் போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளன்று, உழவிற்கு வழி செய்யும் மாடுகளைச் சுத்தம் செய்து கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெல்லி மற்றும் நெட்டி மாலைகள் அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இவ்விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே! நெட்டி மாலை உற்பத்தியில்… மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில் தோட்டம் மற்றும் சீர்காழியடுத்த ஆனைக்காரன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள்…