ஏப்ரல் 15-ல் இயல்பு நிலை திரும்புமா… என்ன முடிவில் இருக்கிறது மத்திய அரசு? – கழுகார் அப்டேட்ஸ்!
பொங்கும் எடப்பாடி… புலம்பும் பாலாஜி! கட்சிப் பதவி பறிக்கப்பட்டதும் மிகவும் நொந்து போய்க்கிடக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. பால்வளத்துறை மானியக்கோரிக்கை அன்று கூட அவரிடம் முதல்வர் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவருடைய பெயரைக் கேட்டாலே எடப்பாடி கொதிக்கும் பாலைப்போல பொங்கி விடுகிறாராம். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருளான பால் எப்படி விநியோகம் செய்யப்படுகிறது என்பதைக்கூட முதல்வர் அலுவலகத்திலிருந்து அமைச்சரிடம் கேட்கவில்லை. துறை அதிகாரிகளிடம்தான் விசாரித்து முடிவு எடுத்திருக்கிறார்கள். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குக் கூட…