“கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான்!”- வழக்கறிஞர் ப.பா.மோகன்
பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் படுகொலையில் மிக முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியாக மாறியதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும், சுவாதிக்கு இரண்டு முறை அவகாசம் கொடுத்தது. ஆனாலும் கோகுல்ராஜ் படுகொலைக்கு முன்பு கோயிலில் சந்தித்துக்கொண்டது குறித்து சுவாதி, முன்னுக்குப் பின் முரணான தகவலை நீதிமன்றத்தில் அளித்ததால், கோகுல்ராஜும் சுவாதியும் சந்தித்துக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நாளை ஆய்வு செய்யப்போவதாக உயர்நீதிமன்ற…