முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்; தடைபட்ட சம்பளம்- போராட்டத்தில் இறங்கிய சென்னை பல்கலை., பேராசிரியர்கள்!
தமிழகத்தின் மிகப் பழைமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் கடந்த மாதம் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோதும், தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று பேராசிரியர்களும் இதர ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், மார்ச் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்கப்…