`எடப்பாடியை பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டது எப்படி?’ – சர்ச்சையான பொதுக்குழு வழக்கு; நடந்தது என்ன?
ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கியபோது ஓ.பி.எஸ் தரப்பில் போடப்பட்ட பொதுக்குழு தொடர்பான மூல வழக்கில் `ஒருங்கிணைப்பாளர்’ ஓ.பன்னீர்செல்வம் என்றும், `இணை ஒருங்கிணைப்பாளர்’ எடப்பாடி கே.பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க பொதுக்குழு இந்த மூல வழக்கில் இரு தரப்பும் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 26-ம் தேதி வந்தது. அப்போது, ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான…