Sports RoundUp: தனி ஒருவனாக சாதித்த பண்ட் முதல் கில்லின் வெற்றி ரகசியம் வரை!
தனி ஒருவன் ரிஷப் பண்ட்! தனது அபாரமான ஆட்டத்தால் 2022-ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணியில் தேர்வாகியிருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ரிஷப் பண்ட். 2022ல் சிறப்பாக விளையாடிய பண்ட், 12 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்துள்ளார், இதில் இரண்டு சதமும், நான்கு அரை சதமும் அடங்கும். இதனிடையே கடந்த ஆண்டின் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய பண்ட், பலத்த காயமடைந்தார். இந்த விபத்தின் காரணமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….