Ooty Flower Show: மலர் மற்றும் பழக் கண்காட்சி எப்போது? தேர்தலால் விழாவுக்கு பாதிப்புகள் உண்டாகுமா?
ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக நீலகிரி விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீலகிரியை நோக்கி படையெடுக்கும் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு வருகைத் தரும் பயணிகளை மகிழ்விக்க மே மாதம் முழுவதும் கோடைவிழா நடத்தப்படுவது வழக்கம். பழ கண்காட்சி அரசுத் தாவரவியல்…