ககன்யான் திட்டம்: விண்வெளியில் பறக்கப்போகும் 4 வீரர்கள் இவர்கள்தாம்!
‘சந்திரயான் – 3’ திட்டத்தை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திய இஸ்ரோ தற்போது, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ எனப்படும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதற்காக 2022-ம் ஆண்டிலிருந்து பல கட்ட சோதனைகளை நடத்திவரும் இஸ்ரோ, 2025-ம் ஆண்டிற்குள் இதைச் சாத்தியப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்குச் செல்லும் இந்தக் குழுவில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என பெங்களூரில் நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி வகுப்பறையில் கடந்த ஆறுமாதங்களாக இந்திய விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவந்தன. ககன்யான் ஃப்ளைட் சிஸ்டம்ஸ், மைக்ரோ-கிராவிட்டி அறிமுகம்,…