சிவாலய ஓட்டம்: சிவனுக்கு வியர்க்கும் என்பதால் 12 கோயில்களில் விசிறியால் வீசி வழிபட்ட பக்தர்கள்!
ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலங்களில் பக்தர்கள் ஓட்டமும், நடையுமாகச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் 3 நாள்களாக நடந்துவருகிறது. சிவாலய ஓட்டம் பற்றி பல்வேறு புராண வரலாறுகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று சூண்டோதரன் வரலாறு. சூண்டோதரன் வரலாறும் செவிவழியாகக் கூறப்படும் ஒன்றுதான். சிவபெருமானை நோக்கிக் காட்டில் தவம் இருந்தான் அசுரனான சூண்டோதரன். தனக்குமுன் தோன்றிய சிவபெருமானிடம், “நான் யாருடைய கழுத்தை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டினாலும் அவர்…