மெட்ராஸ் வரலாறு: சென்னையில் இத்தனை ஏரிகள் இருந்தனவா? – பகுதி 13
நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். ஓர் இடத்தில் சின்ன இடறல். திருமண மண்டப முகவரியில், இறங்க வேண்டிய இடம் என்ற இடத்தில் ‘ஏரிக்கரை பஸ் ஸ்டாப்’ என்று போட்டிருந்தது. ‘அந்த இடத்தில் ஏரி எங்கே இருக்கிறது’ என எங்கள் இருவருக்குமே தெரியவில்லை. மாரியம்மன் நகர், மகாலட்சுமி நகர் என்று அங்குள்ள நகர்கள்தான், அந்தநாளைய ஏரி என்பது தெரியவந்தது. இப்படி குளக்கரை ஸ்டாப்பிங், குளத்தூர் பஸ் ஸ்டாண்டு, ஆத்தூர் மார்க்கெட் என்ற பெயர் உள்ள இடங்களில் பெயருக்கு…