`கைதி டு முதலாளி’ – தண்டனை காலத்தில் கற்ற தொழில்; சிறைத்துறை டி.ஐ.ஜி தொடங்கி வைத்த டைலரிங் கடை!
“ஒரு நல்ல சிந்தனையாளனைச் சிறைவாசம் சிதைக்காது, செதுக்கி வளர்க்கும்…” இதுதான் சாமிவேலுக்குப் பிடித்த வாசகம். கடையைத் திறந்து வைக்கும் சிறைத்துறை டி.ஐ.ஜி தான் புதிதாக பரமக்குடியில் தொடங்கியுள்ள டைலரிங் கடை, இயற்கை ஆயுர்வேத அங்காடி விளம்பரத்தில் இந்த வாசகத்தைத்தான் குறிப்பிட்டுள்ளார். யார் இந்த சாமிவேல்? மதுரை மத்தியச் சிறையில் கடந்த 16 ஆண்டுகளாகத் தண்டனை சிறைவாசியாக இருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின்பு சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் பரமக்குடியில் சொந்தமாக டைலரிங் மற்றும் இயற்கை ஆயுர்வேத அங்காடியையும்…