மும்பை: ஒரே நாளில் ஆனந்த சதுர்த்தி, மிலாடி நபி; சிக்கலைத் தடுக்க பேரணியைத் தள்ளி வைத்த முஸ்லிம்கள்!
மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி 10 நாள்கள் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்கி 28-ம் தேதி முடிகிறது. இறுதி நாளில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம். அந்தத் தினத்தை ‘ஆனந்த சதுர்த்தி’ என்று சொல்வதுண்டு. இந்த ஆண்டு, 28-ம் தேதி ஆனந்த சதுர்த்தியன்று மிலாடி நபியும் வருகிறது. மிலாடி நபியன்று முஸ்லிம்கள் பெரிய அளவில் ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஊர்வலம்…