`நர்சிங் ஹோமில் என் மனைவியைக் கொசுக்கள் கடிக்கின்றன..!’ – உதவி கேட்ட நபரை நெகிழவைத்த உ.பி போலீஸ்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருக்கும் நர்சிங் ஹோமில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதால், ட்விட்டரில் போலீஸிடம் உதவி கேட்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இதற்காகவெல்லாம் போலீஸை அழைப்பார்களா என எண்ணத் தோன்றினாலும், மறுபக்கம் போலீஸ் செய்தது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. கொசு ராஜ் மொஹல்லா பகுதியில் வசிப்பவர் ஆசாத் கான். இதே பகுதியிலிருக்கும் ஹரி பிரகாஷ் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் கர்ப்பிணி மனைவிக்கு நேற்று குழந்தை பிறந்திருக்கிறது. அதேசமயம்…