வரும் சனிக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும்… காரணம் இதுதான்!
சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பதிவுத்துறை அமைச்சர் அமைச்சர் மூர்த்தி “பத்திரப் பதிவுக் கட்டணம் 2% குறைப்பு!” – தமிழக பட்ஜெட் அறிவிப்பு! இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்,வரும் நாள்களில் பத்திரப் பதிவுக்கு ஆவணங்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுவதால் டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுளார். மேலும் வரும் 25ம் தேதி சனிக்கிழமையும் தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சார்ப்பதிவு அலுவலகம் வேலை நாள் நீட்டிப்புக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக நம்மிடம் பகிர்ந்துள்ளார் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் […]