மாஞ்சோலை: மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் அவலநிலை; எஸ்டேட் பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள்!
நகர்ப்புறங்களில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக கட்டப்பட்ட மூன்று / நான்கு கழிப்பறைகள் கொண்ட வீடுகளில் நடுத்தர குடும்பத்தினர் பலரும் வசித்து வருகிறோம். ஆனால், துவக்க காலத்தில் எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களுக்கு வாய்த்ததென்னவோ திறந்தவெளி கழிப்பிடங்களே. 1970களின் பிற்பாதியில் எஸ்டேட்டில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வீட்டிற்கு ஒன்றென, ஒவ்வொரு லயனுக்கும் மொத்தமாக ஒரே இடத்தில் பொதுவெளியில் கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்தது கம்பெனி. குடியிருப்புகளை ஒட்டி போதிய இடம் இல்லாத காரணத்தாலும், சுகாதாரம் கருதியும், இக்கழிப்பறைகள் லயனிலிருந்து கொஞ்சம் தள்ளி…