`பல வார இதழ்களை வண்ணமயமாக்கியவர்…’ – பிரபல ஓவியர் மாருதி உடல்நலக் குறைவால் காலமானார்!
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓவியர் மாருதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பிரபல ஓவியரான மாருதியின் இயற்பெயர் இரங்கநாதன். விகடன், குமுதம், குங்குமம், கண்மணி, பொன்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. ஓவியம் மட்டுமின்றி ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிசெய்திருக்கிறார். ஓவியர் மாருதி அவரின் இறப்பு குறித்து ஓவியர் அரஸிடம்…