நமக்குள்ளே- போக்ஸோ: குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவது அதிகரித்திருக்கின்றது; ஆனால், விசாரணை, தண்டனை?
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளை ஆய்வு செய்த, குழந்தை உரிமைகளுக்கான தொண்டு நிறுவனமான ‘க்ரை’ (CRY), ‘மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, சிறார் வதைக்கு எதிரான போக்ஸோ (POCSO) வழக்குகள் அதிக அளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, முந்தைய ஐந்து ஆண்டுகளில், சிறார் வதை சம்பவங்கள் 96% அதிகரித்து இருக்கின்றன. ஆனால், குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்று இதை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல், இதுவரை காவல்நிலைய படிக்கட்டுகளுக்கே…