திருப்பூர்: மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்த விவகாரம் – ஆசிரியை இருவர் பணியிடை நீக்கம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இளமதி ஈஸ்வரி என்பவர் பணிபுரிந்து வந்தார். மாணவிகள் இந்நிலையில், இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவரும் தலித் மாணவிகள் இருவரை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்திப்பதாகவும், இதற்கு அறிவியல் ஆசிரியை சித்ராவும் உடந்தையாக இருப்பதாகவும் மாணவிகள்…