புதுச்சேரியில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: நெருக்கடியில் நாராயணசாமி அரசு!
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் தேவையான நிலையில் காங் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது. இதனால் முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30…