உயிர் பிரியும் தறுவாயிலும் குழந்தைகளைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர் – மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே வேனில் அவரது மனைவி லலிதாவும் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை சேமலையப்பன் வேனில் அழைத்துச் சென்றுள்ளார். வெள்ளகோவில் காவல் நிலையம்…