போக்சோ வழக்கு விசாரணை… தண்டனைக்குப் பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து குற்றவாளி தற்கொலை!
திண்டுக்கல் மாவட்டம், ஏ.பி நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான் (36). இவர்மீது கடந்த 2023-ல் பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகத் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் அவரைக் கைதுசெய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் இப்படியிருக்க, நேற்று (மார்ச் 19) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக, மாவட்ட சிறையிலிருந்த ஷாஜகான் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக…