Anand Mahindra: “கார் வரத் தாமதமானது இந்தக் காரணத்தாலதான்!” – பிரக்ஞானந்தாவின் அம்மா நாகலட்சுமி
கடந்த ஆண்டு அஜர்பைஜானில் நடந்த உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 2-வது இடம் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார் பிரக்ஞானந்தா. ‘உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் சென்ற இளம் வீரர்’… ‘விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிப்போட்டியில் நுழைந்த இரண்டாவது இந்திய வீரர்’ போன்ற சிறப்புகளும் பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்தன. அப்போது, பிரக்ஞானந்தாவை ஊக்கப்படுத்தும் விதமாக கார் பரிசளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அறிவித்தபடியே, தற்போது பிரக்ஞானந்தாவிற்கு எக்ஸ்.யு.வி 400 எலக்ட்ரிக் காரைப் பரிசளித்துள்ளது…