உடல் உள்ளம் யோகா – 2 | சாங்கிய காரிகை
சாங்கியம் என்னும் இந்தத் தத்துவத்தின் மூலத்தை அளித்தவர் கபிலமுனி. சாங்கியம் என்ற சொல்லுக்கு பகுத்தறிதல், ஆராய்தல், எண்ணுதல் என்று பல்வேறு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு பொருளும் அதன் இயற்கையான குணத்திலிருந்து வளர்ச்சியடைந்து உருமாறுகிறது. ஆதியில் வணங்குதல் என்பது இயற்கையை மட்டுமே. இதனை ஏற்பவர்களும், உருவ வழிபாடுகள் ஆரம்பமான வேத காலத்துக்குப் பிறகு எதிர்ப்பவர்களும் தமக்கான வாதபிரதிவாதங்களால் சாங்கியத்தை ஏற்கவும் மறுக்கவும் ஆரம்பித்தனர். செவிவழிப் பாடமாக வந்த சாங்கியத்தை அளித்தவரான கபிலமுனியின் நூல் கிடைக்காதபோது, ஈஸ்வர கிருஷ்ணன் சாங்கிய…