“விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியமா என்ற கேள்வி…” – `சந்திரயான் 3′ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேட்டி
சந்திரயான் – 3 – கனவு நனவாகியிருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தைத் தரையிறக்கி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்து சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இந்தச் சாதனைக்கு மூலக்காரணமானவர் இத்திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல். விழுப்புரத்தைச் சேர்ந்தவரான வீரமுத்துவேல், இந்த வெற்றிச் செயலின் மூலம் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். விகடனுக்கு அவர் அளித்த பேட்டியைப் பின்வருமாறு பார்க்கலாம். “பொதுவாக கிரிக்கெட் அல்லது சினிமா பிரபலங்களுக்குக் கிடைக்கும் இளைஞர்களின் வரவேற்பு, உங்களுக்கு, அதுவும் அறிவியல் துறையில்…