`அவர் சந்தோஷப்படுவார்!’ – மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பம்
திருச்சி உறையூர் நவாப் தோட்டத்தைச் சேர்ந்த 60 வயது நபர், பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் 27-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச் செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவரது குடும்பத்தார் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு வந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கல்லீரல் திருச்சியில் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை…