பன்னி படக்கம், அவுட்டுக்காய், மின்வேலி, ரயில்… யானைகளைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லிகள்!
கேரளாவில் கர்ப்பிணி யானையின் மரணம், தேசத்தையே உலுக்கியுள்ளது. ’பன்னி படக்கம்’ என்ற வெடி பொருள் வைத்த தேங்காயை உண்டது, கடைசியில் அந்த யானையின் உயிரையே பறித்துவிட்டது. கொரோனா வைரஸ், ஊரடங்கு, பசி, வாழ்வாதாரம் பாதிப்பு என்று பேரிடர்களுக்கு மத்தியிலும் பேரிடியாகத் தாக்கியுள்ளது அந்த யானையின் மரணம். யானை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, கேரளா மன்னார்காடு பகுதியில் உயிரிழந்த யானை குறித்து மட்டுமல்ல; மன்னார்காடுக்கு அருகே உள்ள நம் கோவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக…