`இப்படியோர் மூடநம்பிக்கையா… இன்னும் ஒரு வாரத்தில் அகற்றுங்கள்!’ – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை
சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் சேர்த்து 63 நீதிபதிகள் பணியில் இருக்கிறார்கள். அவர்களில், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அடிக்கடி தென்படும் முகமாக இருக்கிறார் நீதியரசர் என்.ஆனந்த் வெங்கடேஷ். மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்ற வழக்குகளை அவர் கையாள்வது மட்டுமே அதற்குக் காரணமல்ல… அவர் பிறப்பிக்கும் உத்தரவுகளும், உதிர்க்கும் கருத்துகளும்கூட முக்கிய செய்தியாகின்றன. இன்றும் அப்படி ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு வெளியில்…