“இது கண்மூடித்தனமானது” – ஊடகங்கள் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏன் சர்ச்சைக்குள்ளானது?
கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை உலக அளவில் 60,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பொருளாதாரம் முடங்கிப்போய் உள்ளது, உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பற்றிய அச்சமும் தவறான தகவலுமே மக்களிடத்தில் அதிகமாக நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் பத்திரிகைகள், ஊடகங்கள் இயங்குவதிலும் பெரும் சவால்கள்…