Chandigarh: `தேர்தல் அதிகாரி செய்தது சட்டவிரோதம்; AAP வேட்பாளரே வெற்றியாளர்’- உச்ச நீதிமன்றம் அதிரடி
பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கான தலைநகர் சண்டிகரில், கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் குல்தீப் குமாருக்கு விழுந்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி கூறியதையடுத்து, பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற அவையில் வாக்குச் சீட்டுகளை செல்லாதவை என அனில் மஸ்ஹி பேனாவால் திருத்தும் வீடியோவை வெளியிட்ட ஆம்…