தங்கம் தென்னரசு வழக்கு: `குப்பனுக்கும் கருப்பனுக்கும் இதேதானா?’ – கேள்வியெழுப்பிய நீதிபதி
அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கில், அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு வழக்கு தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாகக் கருத முடியும்… வழக்கு பதிவுசெய்யும் முன்பு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும்….