கொரோனா அச்சுறுத்தல்: TOEFL, GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம்!!
இந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் TOEFL மற்றும் GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம் என எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (ETS) அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகளும் நுழைவுத்தேர்வுகளும் காலவரம்பின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் நிலவும் கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு TOEFL மற்றும்…