டீக்கடையில் பெண்ணிடம் தகராறு; போதையில் திமுக நிர்வாகிகள் மோதல்! – இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு
தஞ்சாவூர் அருகே உள்ள டீ கடை ஒன்றில் மன்னார்குடியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் குடிபோதையில் கடையில் வேலை செய்த பெண்ணிடம் ரகளை செய்ததால் கடையின் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களும் எதிர்த்து கேட்டுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பை சேர்ந்த ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பேக்கரி தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (45)…