முட்டம்: 8 நாள் பயணம்; படகில் ஓமனிலிருந்து தப்பிவந்த மீனவர்கள்! – கடலோரப் பாதுகாப்பு போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மற்றும் மேல முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ததேயுஸ், ஸ்டீபன், அல்டோ, ஜோசப் எட்வின், பிரான்சிஸ் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ரஜிப் உடின் ஆகியோர் 14 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாட்டுக்கு மீன்பிடித் தொழில் செய்யச் சென்றுள்ளனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா கமீஷ் என்பவரது விசைப் படகில் இவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக படகு உரிமையாளர் பேசிய சம்பளம் வழங்கவில்லை என…